Loading...

தீ விபத்து: செய்தி

19 Aug 2026
கொல்கத்தா

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் குழந்தை உட்பட 9 வங்கதேச நாட்டினர் உயிரிழப்பு

கொல்கத்தாவின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான நியூ மார்க்கெட் அருகே உள்ள ஃப்ரீ ஸ்கூல் தெருவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில், புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

17 Aug 2026
உக்ரைன்

லட்சுமி மிட்டலின் உக்ரைன் எஃகு ஆலை ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் நாசம்

உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் உள்ள, இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் லக்ஷ்மி மிட்டலுக்கு சொந்தமான ஆர்செலர் மிட்டல் சுரங்க மற்றும் உலோகவியல் வளாகம், ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.

17 Jul 2026
கனடா

நியூயார்க்கில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியது

கனடிய காட்டுத்தீயிலிருந்து வரும் புகையால் மாசுபாடு அபாயகரமான அளவுக்கு உயர்ந்துள்ளதால், நியூயார்க் நகரம் தற்போது ஒரு காற்றுத் தர நெருக்கடியை சந்தித்து வருகிறது.

14 Jul 2026
அமெரிக்கா

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் சேதம்; இந்திய மாலுமி பரிதாப பலி

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாங்காக் பாரில் பயங்கர தீ விபத்து: மின் கசிவால் 27 பேர் பரிதாப பலி

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபல இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

07 Jul 2026
ஓமான்

ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது மிஸைல் தாக்குதல்

ஓமானின் கடற்கரைக்கு அருகில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத மிஸைல் தாக்கியதில் ஒரு எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்தது.

01 Jul 2026
ராஜஸ்தான்

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 8 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயம்

புதன்கிழமை அதிகாலை சுமார் 2:30 மணியளவில், ராஜஸ்தானின் தௌசா அருகே டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் ரிஷிகேஷிலிருந்து இந்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த படுக்கை வசதி கொண்ட பேருந்து ஒன்று டிரெய்லருடன் மோதியதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ஆயுள் காப்பீட்டுத் தொகை கிடைக்குமா? ஒவ்வொரு குடும்பமும் அறிய வேண்டிய உண்மை விபரம்

சமீபகாலமாக டெல்லி மற்றும் லக்னோ போன்ற நகரங்களில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்துகள், ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

26 Jun 2026
சென்னை

சென்னை ஆவடியில் பெரும் பரபரப்பு! மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

சென்னை ஆவடி மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபலமான தனியார் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் புத்தாடைகள் மற்றும் இதர பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து; 15 மாணவர்கள் பரிதாப பலி

உத்தரப் பிரதேசம் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 12 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

22 Jun 2026
கத்தார்

கத்தார் எல்என்ஜி எரிவாயு ஆலை வெடிப்பு: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரின் முக்கிய LNG சுத்திகரிப்பு வளாகமான ராஸ் லஃப்பானில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

04 Jun 2026
டெல்லி

பீகாரில் மருத்துவமனையில் அதிகாலையில் நேரிட்ட தீ விபத்து: 3 பேர் பலி, ஊழியர்கள் ஓட்டம்?

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

03 Jun 2026
டெல்லி

டெல்லியின் மால்வியா நகரில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

தெற்கு டெல்லியின் மால்வியா நகரில் உள்ள லெமன் கிரீன் உணவகத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர்.

17 May 2026
ரயில்கள்

நடுவழியில் கொழுந்துவிட்டு எரிந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஏசி கோச்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 68 பயணிகள்

திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸின் (12431) ஏசி கோச்சில், மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை (மே 17) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

15 May 2026
மஹிந்திரா

காரப்பாக்கத்தில் பரபரப்பு! டெக் மகேந்திரா அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ; மின் கசிவு காரணமா? முழு விவரம்

சென்னையின் பிரதான தகவல் தொழில்நுட்பப் பகுதியான ஓஎம்ஆர் சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா வளாகத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஈரானின் ஃபுஜைரா தாக்குதலில் 3 இந்தியர்கள் காயமடைந்தது 'ஏற்றுக்கொள்ள முடியாதது': பிரதமர் மோடி

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள ஃபுஜைரா பெட்ரோலியத் தொழிற்சாலைகள் மண்டலத்தின் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

09 Apr 2026
மும்பை

மும்பை விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து! டெர்மினல் 1-இல் சூழ்ந்த கரும்புகை

வியாழக்கிழமை மாலை மும்பை விமான நிலையத்தின் டெர்மினல் 1-இல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

16 Mar 2026
ஒடிசா

ஒடிசா: கட்டாக் மருத்துவமனையில் பெரும் தீ விபத்தில் 10 பேர் பலி, 11 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர் மற்றும் 11 ஊழியர்கள் காயமடைந்தனர்.

10 Feb 2026
மணிப்பூர்

மணிப்பூரில் தொடர்ந்து 3வது நாளாக துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு சம்பவங்கள் பதிவு; என்ன காரணம்?

மணிப்பூர் லிட்டன் பகுதியில் செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக பதட்டமான சூழ்நிலை நிலவியதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூர் அரசு உக்ருல் மாவட்டத்தில் மொபைல், பிராட்பேண்ட், VPN மற்றும் VSAT இணைப்புகள் உள்ளிட்ட இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

ஸ்லீப்பர் கோச் பேருந்து தயாரிப்பில் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தியது மத்திய அரசு

கடந்த ஆறு மாதங்களில் நிகழ்ந்த கோரமான தீ விபத்துகளில் 145 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, ஸ்லீப்பர் கோச் (Sleeper Coach) பேருந்துகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய அரசு அதிரடியாகக் கடுமையாக்கியுள்ளது.

நெதர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் தீக்கிரை

நெதர்லாந்தில் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.

29 Dec 2025
ரயில்கள்

டாடாநகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் AC பெட்டியில் பயங்கர தீ விபத்து

ஆந்திர மாநிலம் அனகாபல்லி அருகே இன்று அதிகாலை டாடாநகர் - எர்ணாகுளம் விரைவு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்தார்.

16 Dec 2025
கோவா

கோவா விடுதி தீ விபத்து வழக்கில் உரிமையாளர்களான லுத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்

கோவாவில் 25 பேர் உயிரிழக்க காரணமான பயங்கர தீ விபத்து சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த, இரவு விடுதியின் உரிமையாளர்களான சௌரப் லுத்ரா மற்றும் கௌரவ் லுத்ரா ஆகிய இரு சகோதரர்களும் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

16 Dec 2025
டெல்லி

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் வாகனங்கள் மோதி தீ விபத்து: 4 பேர் பலி, 25 பேர் காயம்

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள டெல்லி-ஆக்ரா விரைவு சாலையில் (யமுனா விரைவுச் சாலை), இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

11 Dec 2025
அசாம்

குவஹாத்தி வணிக வளாகத்தில் 33 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீ

அசாமின் குவஹாத்தியில் உள்ள ஸ்வகதா சதுக்க வளாகத்தில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு, இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது

11 Dec 2025
கோவா

கோவா தீ விபத்து: லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது; நாடு கடத்தும் பணி ஆரம்பம் என தகவல்

கோவாவில் 25 உயிர்களைப் பலிகொண்ட இரவு விடுதி தீ விபத்துச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான குற்றவாளிகளான கௌரவ் மற்றும் சௌரப் லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

08 Dec 2025
கோவா

'ஆழ்ந்த அதிர்ச்சி...': தீ விபத்துக்குப் பிறகு தலைமறைவான கோவா கிளப் உரிமையாளர் முதல்முறையாக மௌனம் கலைத்தார்

கோவாவில் உள்ள Birch by Romeo Lane என்ற இரவு விடுதியின் உரிமையாளர் சௌரப் லுத்ரா, 25 பேர் கொல்லப்பட்ட பேரழிவு தீ விபத்துக்கு பிறகு தனது மௌனத்தை கலைத்துள்ளார்.

07 Dec 2025
கோவா

கோவா கிளப்பில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலியான சோகம்

வடக்கு கோவாவின் பிரபலமான பாகா கடற்கரை அருகே உள்ள ஆர்போரா கிராமத்தில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் (Birch by Romeo Lane) என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

28 Nov 2025
ஹாங்காங்

ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு; மூவர் கைது

ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) அடுக்குமாடிக் குடியிருப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

27 Nov 2025
ஹாங்காங்

ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் கொடூர தீ விபத்து; 44 பேர் பலி, 300 பேர் மாயம்

ஹாங்காங்கில் உள்ள டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 300 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

21 Nov 2025
பிரேசில்

பிரேசில் COP30 பருவநிலை மாநாட்டில் தீ விபத்து: 21 பேர் காயம்

பிரேசிலின் பெலெம் (Belém) நகரில் நடைபெற்று வரும் COP30 பருவநிலை உச்சி மாநாட்டின் அரங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

08 Nov 2025
டெல்லி

டெல்லி ரோகிணி பகுதியில் பயங்கரத் தீ விபத்து: 500 குடிசைகள் எரிந்து சாம்பல்; ஒருவர் பலி

தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ரித்தாலா மெட்ரோ நிலையம் அருகே பெங்காலி பஸ்தி என்ற குடிசைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், சுமார் 400 முதல் 500 தற்காலிக வீடுகள் (குடிசைகள்) எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நூல் பேருந்து விபத்து: ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி

ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

18 Oct 2025
டெல்லி

டெல்லியில் எம்பிக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கரத் தீ விபத்து; மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

சனிக்கிழமை (அக்டோபர் 18) மதியம் டெல்லியின் பிஷம்பர் தாஸ் மார்க்கில் உள்ள பல மாடிகளைக் கொண்ட காவேரி அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

15 Oct 2025
ராஜஸ்தான்

ஜெய்சால்மர் பேருந்து தீ விபத்து கோரம்: 20 பேர் உயிருடன் கருகி உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மருக்கு சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 20 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர், மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.

ஜெய்ப்பூரில் பிரபல மருத்துவமனையின் ஐசியுவில் தீ விபத்து: 8 நோயாளிகள் பலி

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் (SMS) மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமான தீ விபத்தில், மூன்று பெண்கள் உட்பட எட்டு நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

13 Jul 2025
ரயில்கள்

திருவள்ளூர் அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீப்பிடித்து விபத்து

சென்னை-அரக்கோணம் ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) அதிகாலை திருவள்ளூர் அருகே எண்ணெய் ஏற்றப்பட்ட சரக்கு ரயில் தீப்பிடித்ததால் பதற்றம் நிலவியது.

தெலுங்கானா தொழிற்சாலை வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி இண்டஸ்ட்ரீஸின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது, 27 தொழிலாளர்கள் இன்னும் காணவில்லை என்று IANS தெரிவித்துள்ளது.

18 May 2025
ஹைதராபாத்

ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள குல்சார் ஹவுஸ் அருகே, வரலாற்று நினைவுச்சின்னமான சார்மினாருக்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

29 Apr 2025
சீனா

சீனாவின் லியாயாங் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழப்பு

சீனாவின் வடக்கு நகரமான லியாயாங்கில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.

29 Apr 2025
லண்டன்

லண்டனில் உள்ள மின்சார துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; 100 தீயணைப்பு வீரர்கள் குவிப்பு

ஐக்கிய இராச்சியத்தின் வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு மின் துணை நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாலையில் தீ விபத்து

தெற்கு மும்பையின் பல்லார்டு எஸ்டேட் பகுதியில் உள்ள கைசர்-ஐ-ஹிந்த் கட்டிடத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) அதிகாலை ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்தில் குழந்தைகளை காப்பாற்றிய நான்கு இந்திய புலம்பெயர் தொழிலாளர்களை கௌரவித்தது சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூரில் ரிவர் வேலி சாலையில் உள்ள ஒரு கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 16 குழந்தைகள் உட்பட 22 பேரை துணிச்சலாக களமிறங்கி மீட்ட நான்கு இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.

ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீவிபத்தில் சிக்கினார்

நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் செவ்வாய்க்கிழமை காலை தனது பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயமடைந்ததாக அக்கட்சி X இல் ட்வீட் செய்தது.

ஜனவரி 19 முதல் 5 வது முறையாக கும்பமேளா பகுதியில் தீ விபத்து

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில், காலியாக இருந்த 'தனியார் முகாமில்' தீ விபத்து ஏற்பட்டது.

15 Feb 2025
நேபாளம்

சுற்றுலா நிகழ்ச்சியில் பலூன் வெடித்ததில் நேபாள துணை பிரதமர் மற்றும் பொக்ரா மேயருக்கு தீக்காயம்

சனிக்கிழமை (பிப்ரவரி 15) பொக்ரா சுற்றுலா ஆண்டின் தொடக்க விழாவில் ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் வெடித்ததில் நேபாளத்தின் துணைப் பிரதமர் பிஷ்ணு பவுடல் மற்றும் பொக்ரா பெருநகர மேயர் தன்ராஜ் ஆச்சார்யா ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.

மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து, பக்தர்கள் பீதி

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பமேளாவின் 18வது செக்டாரில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

ஜல்கான் ரயில் பயங்கரம்: தீ விபத்துக்கு பயந்து குதித்த 11 பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

22 Jan 2025
துருக்கி

துருக்கியில் பனிச்சறுக்கு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 76 பேர் பலி: 9 பேர் கைது

துருக்கியின் வடமேற்கு போலு மாகாணத்தின் கர்தல்கயா ஸ்கை ரிசார்ட்டில் உள்ள கிராண்ட் கர்தல் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 76 பேர் உயிரிழந்தனர்.

13 Jan 2025
திருப்பதி

லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து; திருப்பதியில் தொடரும் சோகம்

கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலின் லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.

எரிபொருள் டேங்கர் மீது ரசாயன லாரி மோதியதில் கடும் தீ விபத்து; 8 பேர் பலி, 40 வாகனங்கள் எரிந்து நாசம்

ஜெய்ப்பூரில் இன்று காலை ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் ரசாயனம் ஏற்றி வந்த எல்பிஜி டேங்கர் மற்றும் ரசாயனம் ஏற்றி ஏற்றி வந்த லாரி மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

திண்டுக்கல்லில் உள்ள தனியார் எலும்புமுறிவு மருத்துவமனையில் தீ விபத்து; 6 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டத்த்தில் திருச்சி ரோட்டில் அமைந்துள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

03 Dec 2024
பாலிவுட்

இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரி

பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரியான அலியா ஃபக்ரி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனது முன்னாள் காதலன் உட்பட இருவரை தீ வைத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 Oct 2024
கேரளா

கேரள கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் காயம்

கேரள மாநிலம் காசர்கோடில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட வாணவேடிக்கை விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

11 Oct 2024
ரயில்கள்

திருவள்ளூர் அருகே பயணிகள் ரயில் விபத்து: 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மோதியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

02 Oct 2024
எஸ்யூவி

194,000 பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவிகளை திரும்பப் பெறுகிறது ஜீப்; என்ன காரணம்?

ஜீப்பின் தாய் நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ் , சாத்தியமான தீ விபத்து அபாயங்கள் காரணமாக சுமார் 194,000 பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவிகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

01 Oct 2024
பாங்காக்

பாங்காக்கில் பள்ளி பேருந்து தீப்பிடித்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

செவ்வாய்க்கிழமை புறநகர் பாங்காக்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

14 Jun 2024
குவைத்

குவைத் தீவிபத்தில் இறந்த 45 இந்தியர்களின் உடல்களுடன் கேரளாவிற்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம்

குவைத்தில் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை கேரளாவுக்கு புறப்பட்டது.

13 Jun 2024
குவைத்

குவைத்தில் கட்டிட தீ விபத்தில் 40 மேற்பட்ட இந்தியர்கள் பலி; உடல்களை இந்தியா எடுத்துவர நடவடிக்கை

குவைத்தில் மங்காப் நகரில் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 40 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12 Jun 2024
குவைத்

குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம்

புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள், தமிழர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

31 May 2024
சென்னை

சென்னை பெரும்பாக்கத்தில் சுமார் 2 கி.மீ நீளத்திற்கு பரவிய தீ

சென்னை மேடவாக்கம் சதுப்பு நில பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

27 May 2024
டெல்லி

டெல்லி மருத்துவமனை தீ விபத்து: குழந்தை பராமரிப்பு மைய உரிமையாளர் கைது

7 பிறந்த குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான பேபி கேர் நியூ பர்ன் குழந்தைகள் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் நவின் கிச்சியை மே 30 வரை போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

27 May 2024
குஜராத்

குஜராத் கேமிங் சோன் தீ விபத்தின் போது தீ எப்படி தொடங்கியது என்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள்

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள டிஆர்பி கேம் மண்டலத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகியனர்.

26 May 2024
குஜராத்

தீ விபத்து ஏற்பட்ட ராஜ்கோட் கேமிங் மண்டலத்திற்கு தீயணைப்பு துறை அனுமதி வழங்கவில்லை

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேமிங் மண்டலத்தில், நேற்று ஏற்பட்ட தரும் தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

26 May 2024
குஜராத்

குஜராத் கேமிங் மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேமிங் மண்டலத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.

26 May 2024
டெல்லி

டெல்லி குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி, உரிமையாளர் மீது வழக்கு

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 7 குழந்தைகள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

09 May 2024
சிவகாசி

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதற, அந்த விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள், 3 ஆண் தொழிலாளர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோயிலில் பெரும் தீ விபத்து; 14 பேர் படுகாயம்

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோயிலில் இன்று (மார்ச் 25) காலை ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம்

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு ஏழு மாடி கட்டிடம் தீ விபத்துக்குள்ளாகியதால் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

காண்க: நைரோபி எரிவாயு நிறுவனத்தில் தீ விபத்து; இருவர் பலி, 165 பேர் காயம்

கென்யாவின் தலைநகர் நைரோபியில் எரிவாயு வெடித்ததில் இருவர் இறந்துள்ளனர், குறைந்தது 165 பேர் படுகாயம் காயமடைந்தனர்.

14 Dec 2023
காவல்துறை

அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து

ஆவடி அருகே அமைந்துள்ளது அண்ணனூர் ரயில் நிலையம்.

30 Nov 2023
குஜராத்

குஜராத் மாநிலம் சூரத் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 7 பேர் உடல்கள் மீட்பு

குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வந்த ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேரின் உடல் இன்று(நவ.,30) மீட்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.